இந்திய அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில், வங்கதேச அணியின் சார்பாக களமிறங்கிய தொடக்க வீரர்களில் தமிம் இக்பால் அபாரமாக விளையாடி 25 பந்துகளில் 25 ஓட்டங்களை அடித்து விட்டார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சவும்யா சர்க்கார், மக்மதுல்லா இந்திய பந்துவீச்சை சமாளித்து நிதானமாக ஓட்டங்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.
மக்மதுல்லா 21 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, அவர் அடித்த பந்து எல்லைக் கோட்டை நோக்கி சென்றது.
எல்லைக் கோட்டில் நின்ற ஷிகர்தவான் அந்தரத்தில் மிதந்து வந்த பந்தை தடுத்து பிடிக்க முயன்றார், அப்படியும் பந்து கையில் சிக்கவில்லை.
பின்னர் அதனை மீண்டும் பிடிக்க முயன்றபோது பேலன்ஸ் கிடைக்காமல் எல்லைக்கோட்டினை தொட்டுவிட முயன்றார்.
அந்த சமயத்தில் புத்திசாலித்தனமாக பந்தை எல்லைக்குள் வீசி விட்டு பவுண்டரி லைனுக்கு வெளியே காலை வைத்து பேலன்ஸ் செய்து விட்டு மீண்டும் வந்து அந்த பந்தை பிடித்து மக்மதுல்லாவை ஆட்டமிழக்க செய்தார்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.