இன்று வங்காளதேசத்திற்கு எதிரான இன்றைய கால் இறுதி போட்டியில் தவான் அவுட் ஆனதும், விராட் கோலி பேட் செய்ய மைதானத்திற்குள் வந்தபோதே, வங்கதேச பவுலர் ரூபல் அவரிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு சிரித்தார். இதை பார்த்த ரசிகர்களும், ஏதோ பழைய நண்பர்கள் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்போல என நினைத்துக் கொண்டனர்.
17.4-வது ஓவரில் ரூபல் ஹுசைனின் பந்துவீச்சை எதிர்கொண்ட கோலி 3 ரன்களில் அவுட் ஆனார். ஹுசைன் பந்துவீச்சில் கோலி ஷாட் அடித்தபோது விக்கெட் கீப்பர் ரஹிம் கேட்ச் பிடித்தார். கோலி 8 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். கோலி அவுட் ஆனதும், ரூபல் அவரை நோக்கி ஆக்ரோஷமாக எதையோ சொல்லியபடி கத்தினார். நெஞ்சை நிமிர்த்தி திமிறியபடி நின்ற அவரை சக வீரர்கள் சேர்ந்து பிடித்து வைத்தனர். அவரது நடவடிக்கைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தன. ஆனால், கோலி இதை கண்டு கொள்ளாமல் பெவிலியனை நோக்கி நடந்து சென்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.