
ரஜினியை வைத்து எந்திரன் படத்தை இயக்குவதற்கு முன், அப்படத்தை ஷாருக்கானை வைத்து ரோபோ என்ற பெயரில் ஹிந்தியில் இயக்க இருந்தார் ஷங்கர். அப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கவிருந்தது. பின்னர் ஷங்கருக்கும், ஷாருக்கானுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரோபோ படம் ட்ராப்பானது. தற்போது இன்னொரு தமிழ் இயக்குநருக்கு ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கத்தி படத்தை அடுத்து தற்போது சோனாக்ஷி சின்ஹாவை வைத்து அகிரா என்ற ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை எ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போகிறார் என்று ஒரு தகவல் அடிபட்டு வருகிறது. கூடுதல் தகவலாக, அப்படத்தை ஆஸ்கார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போகிறது என்றும் செய்திகள் வந்தன. இதனை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மறுத்ததாகவும் கேள்வி.
இந்நிலையில் அகிரா படத்தைத் தொடர்ந்து, ஷாருக்கான் நடிக்கும் ஹிந்திப்படம் ஒன்றை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப்போவதாக செய்திகள் அடிபடுகிறது. இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா.. வதந்தியா... என்று சம்மந்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும்!
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.