↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மகாராஸ்டிராவில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை கிராம மக்கள் நிர்வாணக் கோலத்தில்  கழுதையின் மீது அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச்சென்றுள்ளனர்.
அஹமத்நகர் மாவட்டத்தின் வம்போரி கிராமத்தை சேர்ந்த சுபம் பார்டியா (19) என்ற வாலிபன், அதே கிராமத்தை சேர்ந்த வேறொரு சமூகத்தை சேர்ந்த 15 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளான்.

இந்நிலையில், அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்த அந்த வாலிபன், அந்த காட்சிகளை பரப்பி விடுவேன் என மிரட்டி தன்னை பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் பெற்றோரிடம் புகார் கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டப்பட்ட வாலிபனை பிடித்து, நிர்வாணப்படுத்தி, கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்து, கழுதை மீது அமர வைத்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

இதனை தட்டி கேட்ட வாலிபனின் பெற்றோரையும், உறவினர்களையும் அடித்துள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்த உள்ளூர் பொலிசார், சிறுமியின் உறவினர்கள் 17 பேரை கைது செய்துள்ளனர்.
பின்னர் அந்த இளம்பெண், சுபம் பார்டியா தன்னை மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டதாக நேற்றிரவு பொலிசில் புகார் அளித்துள்ளார்.

மேலும், அந்த கிராமத்தில் வாலிபனை வினோதமான முறையில் தண்டித்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top