↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ்  படத்திலும், பாண்டிராஜ் இயக்கத்தில் ஹைக்கூ படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார். அவருடைய 2டி நிறுவனத்தின் தயாரிப்புகளான ஹைக்கூ, 36 வயதினிலே படங்களிலும் தற்போது முழு கவனம் செலுத்தி வருகிறாராம். இந்தப் படங்களையடுத்து மீண்டும் தன்னுடைய சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக  என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை விக்ரம் குமார் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையைமக்கிறார்.

இந்தப் படத்திற்காக மும்பையில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறதாம். முதல் கட்டப் படப்பிடிப்பு அங்குதான் நடைபெற உள்ளது என்கிறார்கள். சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார். ஏற்கெனவே இந்தக் கூட்டணி அஞ்சான் படத்தில் இணைந்ததாலும், அந்தப் படம் போலவே படமும் மும்பையில் எடுக்கப்பட உள்ளதாலும் அந்த தோல்வி ராசி இந்தப் படத்திற்கும் தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதுதான் சூர்யா ரசிகர்களின் விருப்பமாக இருக்கும்.

தமிழ், தெலுங்கில் இந்தப் படத்தை எடுக்க உள்ளதால் நிறையவே செலவு செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். சூர்யாவும், கார்த்தியும் தற்போது வெளி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிப்பதை முழுவதுமாகக் குறைத்துக் கொண்டார்கள். அவர்களுடைய உறவினரான ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களில் இதுவரை நடித்து வந்தவர்கள், இனி முற்றிலுமாக வெளி கம்பெனிகளில் நடிப்பதில்லை என்றே முடிவெடுத்திருக்கிறார்களாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top