↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த 'ஜீவா' படத்தின் வெற்றியை அடுத்து விஷ்ணுவின் மார்க்கெட் குறிப்பிட்டு சொல்லும்படி உயர்ந்துள்ளது. அவர் தற்போது நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இடம் பொருள் ஏவல், கலக்கற மாப்ளே, இன்று நேற்று நாளை, மற்றும் 'போடா ஆண்டவனே என் பக்கம்' ஆகிய படங்களில் நடித்து வரும் விஷ்ணு, சமீபத்தில் தனது 'போடா ஆண்டவனே என் பக்கம்' படத்தில் ஒருசில விபரங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா போன்ற படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கவுள்ள இந்த படத்தை விஜய் ராஜ் தயாரிக்கவுள்ளதாகவும், பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை செல்வா எடிட்டிங் செய்யவுள்ளதாகவும் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அனல் தெறிக்கும் வசனத்தின் பெயர் கொண்ட இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க பிசாசு நடிகை பிரயாகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் துவங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top