↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தை அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது சிம்புவை வைத்து இயக்கி வரும் படம் - அச்சம் என்பது மடைமையடா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே ஆரம்பமானது. சில தினங்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில், அஜித் படம் கமிட்டானதால் அதில் பிஸியானார் கௌதம் வாசுதேவ் மேனன். அதனால், சிம்பு நடித்த படத்திற்கு பிரேக் விட்டிருந்தார். தற்போது அஜித்தின் என்னை அறிந்தால் படம் வெளியாகிவிட்டதால், மீண்டும் சிம்பு படத்தின் படப்பிடிப்பு வேலைகளைத் துவக்கிய கௌதம் வாசுதேவ் மேனன், கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் பிஸியாக படப்பிடிப்பை நடத்தினார்.

சீராகப் போய்க் கொண்டிருந்த இந்த 2ஆவது ஷெட்யூல் படப்பிடிப்புக்கு தற்போது பிரேக் விட்டிருக்கிறார். இதனையடுத்து மீண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் அடுத்த மூன்றாவது ஷெட்யூலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். அச்சம் என்பது மடைமையடா படத்தின் கதையே காதலியைத் தேடி இந்தியா முழுக்க சிம்பு அலைவதுதான். எனவே அடுத்தகட்ட படப்பிடிப்பு அனேகமாக மும்பை அல்லது டில்லியாக இருக்கலாம். இந்த இடைவெளியில் அச்சம் என்பது மடைமையடா படத்திற்கான டைட்டில் லோகோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளனர். அவற்றை உருவாக்கும் பணி தற்போது நடைபெறுகிறதாம். 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top