↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது தொடர்பாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக்கிண்ணத் தொடரின் காலிறுதியில் இன்று நடந்த ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வியடைந்தது.
இது குறித்து இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில் " தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இன்று இலங்கை அணி ஆடிய ஆட்டம், உலகக்கிண்ணப் போட்டியில் மோசமான ஆட்டமாக மாறிவிட்டது.
சங்கக்காரா, ஜெயவர்த்தனே இருவரும் 16-17 வருடங்கள் அணிக்காக விளையாடியவர்கள். இருவருக்கும் என்றும் நினைவில் நிற்கும் போட்டியாக இன்றைய போட்டி அமையாதது வருத்தமளிக்கிறது.
நாங்கள் 250 ஓட்டங்கள் எடுத்திருந்தால், அது எங்கள் பந்து வீச்சாளர்கள் அணியை வெற்றி பெற வைக்க ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்திருக்கும். ஆனால் நாங்கள் முதல் பந்திலிருந்தே ஆட்டத்தை தக்க வைக்க தவறி விட்டோம்” என்று கூறியுள்ளார்.
பீர் குடித்து கொண்டாடும் டிவில்லியர்ஸ்
தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கூறுகையில் “இன்றைய போட்டிக்கு மிகவும் தயாரிப்போடு நாங்கள் இருந்தோம். எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினர்.
குறிப்பாக எங்கள் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எங்கள் அணி இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கும். நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இப்போதைக்கு இன்றைய வெற்றியை கொண்டாட பீர் குடித்து விட்டு அடுத்து போட்டியை பற்றி யோசிப்போம்” என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top