↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad  2 ஹீரோ கதையில் ஆர்வமா?- கார்த்தி
தமிழ், தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் புதிய படத்தில் கார்த்தி, நாகார்ஜூனா இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு கடந்த வாரம் ஐதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பூஜை போடப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை ஏவி.எம்பிள்ளையார் கோயிலிலும் இதேபடத்துக்கு 2வதுமுறையாக பூஜை நடைபெற்றது. சிவகுமார் பங்கேற்று கார்த்தி நடிக்கும் காட்சியை தொடங்கி வைத்தார். வம்சி இயக்குகிறார். ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி உள்ளார். மற்றொரு ஹீரோயின் தேர்வு நடக்கிறது. பிவிபி நிறுவனம் தயாரிக்கிறது.

இதுவரை சோலோ ஹீரோவாக நடித்துவந்த கார்த்தி முதன்முறையாக டபுள் ஹீரோ கதையில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,‘ஏற்கனவேகூட டபுள் ஹீரோ கதையில் நடிக்க கேட்டு என்னை இயக்குனர்கள் அணுகி இருக்கின்றனர். ஆனால் அதில் எனக்கு ஆர்வமில்லை. ஆனால் இயக்குனர் வம்சி கூறிய ஸ்கிரிப்ட் என்னை கவர்ந்தது. உணர்வுபூர்வமாக ஈர்த்ததையடுத்து ஓகே சொன்னேன். இப்போதெல்லாம் செல்போனில்தான் எல்லோருமே பிஸியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அருகில் உள்ளவர்களிடம்கூட பேச மறந்துவிடுகிறார்கள். இப்படம் உறவுகளுக்கு இடையேயான முக்கியத்துவத்தை உணர்த்தும். ஒவ்வொருவரும் மற்றொருவர் மீது எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை இரண்டு கதாபாத்திரங்களை கொண்டு கதை விளக்குகிறது'  என்றார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top