↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
உள்ளூரில் மட்டுமல்ல, உலக வியாபாரத்திலும் யார் காலரை தூக்குகிறார்களோ, அவர்களுக்குதான் காவடி தூக்கவும் தயாராக இருக்கிறார்கள் ரசிகர்கள். அந்த வகையில் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் சூர்யா படங்களுக்கு செம மாஸ்! சற்றே சறுக்கியடித்தாலும், மார்க்கெட்டை வீக்காக்கிக் கொள்ளாமல், படக்கென்று எழுந்துவிடுகிற குதிரையாகதான் இருக்கிறார் சூர்யா. இந்த முறை அவர் போட்டிருக்கும் திட்டம் பலே பயில்வான் ரகம்!
முன்பெல்லாம் தனது நெருங்கிய உறவினரான ஞானவேல் ராஜாவின் தயாரிப்புகளில் நடிக்க ஆர்வம் காட்டிய சூர்யா, நடுவில் அங்கே இங்கே போனதால் வந்த கோளாறுகளை நாடறியும். தற்போது மீண்டும் தொடர்ச்சியாக ஞானவேல்ராஜாவுக்கு மூன்று படங்களை நடித்து தர சம்மதித்திருக்கிறாராம். அதில் ஒரு படம்தான் மாஸ். பொதுவாக தான் நடிக்கும் படங்களில் சம்பளத்தில் ஒரு பகுதியையும், மீதி தொகைக்கு ஆந்திரா உரிமை அல்லது தொலைக்காட்சி உரிமை என்று அடிஷனலாக வேறொன்றையும் வாங்கிக் கொள்ளும் சூர்யா, இந்த மாஸ் படத்திலும் அதற்கப்புறம் நடிக்கப் போகும் இரு படத்திலும் வெறும் சம்பளத்தை மட்டுமே வாங்கிக் கொள்ளப் போகிறாராம். அந்த சம்பளம் முழுமையானது. வேறு யாரும் இதற்கு முன்பு அவருக்கு அளித்திராதது.
எவ்வளவு தெரியுமா? 100 கோடி. மூன்று படங்களுக்கு நூறு கோடி. இதை மூன்றால் வகுத்து பெருமூச்சு விட்டுக் கொள்ள வேண்டியது அவரவர் மூச்சு விடும் திறனை பொறுத்த விஷயம்!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top