கிளிநொச்சியின் முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
சிட்னியில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், கிளிநொச்சியில் தென்னாபிரிக்க ரசிகர்கள் இலங்கை அணி ரசிகர்களை கேலி செய்துள்ளனர்.
இதனையடுத்து, இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே வாள்வெட்டு இடம்பெற்றது.
வாள்வெட்டுச் சம்பவத்தில் ரஜினிகாந், விஜயகாந்த் ஆகிய இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
முழங்காவில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.