↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
‘லிங்கா’ விநியோகஸ்தர்களின் பிச்சையெடுக்கும் போராட்டம் தேதி அறிவிப்பு..!
‘லிங்கா’ பட நஷ்டஈடு விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
10 கோடி ரூபாய்வரையிலும் நஷ்ட ஈடு தர முன் வந்த தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மேற்கொண்டு எந்தவித முயற்சியும் எடுக்காததால் ‘லிங்கா’ படத்தினால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் தாங்கள் முன்பே அறிவித்திருந்தபடியே பிச்சையெடுக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துவிட்டனர்.
இது தொடர்பாக இன்றைக்கு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
வணக்கம்.
‘லிங்கா’ திரைப்படத்தினால் விநியோகஸ்தர்களாகிய எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்கள் நடத்திய பிறகு எங்களை அழைத்த திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அவர்களும் 10 கோடி ரூபாயை மட்டுமே திருப்பித் தர நடிகர் ரஜினிகாந்த் அவர்களும், படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் அவர்களும் ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தனர்.
அந்தத் தொகையில் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி இசைவு தெரிவித்த பிறகும், வினியோகஸ்தர்களை அழைத்து பிரச்சனையை தீர்க்காமல் கண்ணாமூச்சி காட்டி வரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும், ராக்லைன் வெங்கடேஷ் அவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டே எங்களின் பேச்சுரிமைக்கு எதிராக நீதிமன்றத் தடை பெற்ற ராக்லைன் வெங்கடேஷைக் கண்டிக்காத சங்கங்களை நினைத்து வருந்துகிறோம்.
எங்களின் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி தராத நடிகர் ரஜினிகாந்தைக் கண்டித்து எதிர்வரும் மார்ச் 22-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை, போயஸ் கார்டனில் அமைந்துள்ள அவரின் இல்லத்துக்கு எதிரே முன்னர் அறிவித்தபடி ‘மெகா பிச்சை’ எடுக்கும் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானித்துள்ளோம்.
அதற்கு முன்னதாக மார்ச் 21ம் தேதி, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு ‘லிங்கா’ படத்தைத் திரையிட்டதில் நஷ்டமடைந்த அனைத்துத் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டம் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் நடைபெற இருக்கிறது.
எங்கள் போராட்டத்தை திசை திருப்பும் வகையிலும், தடை ஏற்படுத்தும் வகையில் பிரச்சனை முடிந்து விட்டது என்று இந்தப் பிரச்சனை பற்றி சிறிதும் தெரியாத சிலர், எஸ்.எம்.எஸ். மூலமும், வாட்ஸ்அப் மூலமும் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்களை வன்மையாக்க் கண்டிக்கிறோம்.
‘லிங்கா’ நஷ்ட ஈட்டுப் பிரச்சனை தொடர்பாக நாங்கள் அறிவிக்கும் முடிவே இறுதியானது. அதுவரை யார் சொல்வதையும் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அகிம்சை முறையில் நடைபெற இருக்கும் இந்தப் போராட்டத்தில் உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
இவ்வாறு விநியோகஸ்தர்கள் தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர்.
இதனால் அசிங்கப்படப் போவது யார் என்பதை தயாரிப்பாளர் தரப்பு சற்று யோசிக்க வேண்டும்..! மானம் போனாலும் பரவாயில்லை. காசு போகாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இவர்களை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்..?

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top