30 வயது நடிகைகளும், இளவட்ட நடிகைகளும் தற்போது விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில்தான் நடித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நயன்தாராவுக்கு வயது கூட கூட, இளமையும் கூடிக்கொண்டே செல்கிறது. இதனால்தான் சிம்புவுடன் இது நம்ம ஆளு, உதயநிதியுடன் நண்பேன்டா, ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், சூர்யாவுடன் மாஸ், விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான், ‘மாயா‘ என பிரேக் இல்லாமல் நடித்துக்கொண்டிருப்பதுடன் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்திலும், அஜீத் நடிக்க உள்ள புதிய படத்திலும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார்.1 கோடி, 2 கோடி என்று தனது சம்பளத்தை ஏற்றிக்கொண்டு செல்லும் நயன்தாரா, தற்போது 3 கோடியை தொட்டிருக்கிறாராம்.
கோலிவுட், டோலிவுட்டில்தான் இவரால் இவ்வளவு சம்பளம் பெற முடிகிறது. மலையாளத்தில் நயன்தாராவை நடிக்க கேட்கும் தயாரிப்பாளர்கள் 1 கோடி சம்பளம் என்றதும் ஓடிவிடுகிறார்களாம். ஆனாலும் சித்திக் இயக்கும் ‘பாஸ்கர் தி ராஸ்கல்Õ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. இதற்காக அவர் தனது சம்பளத்தில் தள்ளுபடி செய்துகொண்டு 85 லட்சம் மட்டுமே வாங்கிக்கொள்ள சம்மதித்திருக்கிறாராம். தள்ளுபடிக்கு மாற்றாக வேறு ஒரு உறுதியை அவர் இயக்குனரிடம் பெற்றிருக்கிறார். அதாவது மற்ற மொழியில் இப்படத்தை ரீமேக் செய்தால் அதில் தன்னைத்தான் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.