↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை மற்றும் பலாத்காரத்தை எதிர்த்து 2 பெண்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
மும்பையைச் சேர்ந்த பங்குரி அவஸ்தி மற்றும் உப்பெகா ஜெயின் என்ற 2 பெண்கள் பலாத்காரத்தையும், பெண்கள் மீது நடக்கும் வன்முறைகளையும் எதிர்த்து பேசியும், பாடியும் வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர்.

நேற்று இணையத்தில் வெளியிடபட்ட இந்த வீடியோவில், நாட்டில் நடக்கும் பலாத்காரங்கள், பெண் சிசு கொலை, துன்புறுத்தல் உள்ளிட்டவை பற்றி அந்த பெண்கள் பேசியுள்ளனர்.

கூகுகளில் அதிகமாக சன்னி லியோனை தேடும் இவர்கள் தான் ஒழுக்கத்தை கற்பிக்கிறார்கள் என்றும் அப்பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது இணையத்தில் வேகமாக பரவும் இந்த வீடியொவை இதுவரை சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top