↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


'கத்தி' வெற்றிப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் நேரடி இந்திப்படம் ஒன்றை இயக்குவதாக முதலில் தகவல்கள் வெளிவந்தது. அதன்பின்னர் அந்த படம் கைவிடப்பட்டதாக கூறிய நிலையில் தற்போது மீண்டும் அந்த படம் தொடங்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அருள்நிதி நடிப்பில் தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'மெளனகுரு' திரைப்படத்தின் கதையை இந்திக்கு தகுந்தவாறு மாற்றி, அருள்நிதி கேரக்டரையும் பெண் கேரக்டராக மாற்றி அதில் சோனாக்ஷி சின்ஹா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்ய ஆர்.டி.ராஜசேகர் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே முருகதாஸின் 'கஜினி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தி' படத்தை அடுத்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசையமைக்கவுள்ள இளம் இசைப்புயல் அனிருத். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top