
விஜயகாந்த தமிழ்நாட்டில் அரசியலில் எப்படியோ தெரியாது. ஆனால் சினிமாவுலகில் ஒரு முதல்வரை போலவே அக்கறையோடு அவர் செயல்பட்டிருக்கிறார்.
நடிகர் சங்கத்துக்காக அவர் செய்த உதவிகள் பல, அதையெல்லாம் நாங்கள் சொல்லி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இல்லை.
தனது மகன் நடிக்கும் சகாப்தம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார். அதன் முதல் முயற்சியாக ரஜினி, கமல் இருவரிடமும் போனில் தனது மகன் இசை வெளியீட்டு விழாவிற்கு வருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதன்பின் விஜய், சூர்யா, விஷால், கார்த்தி என இளம் ஹீரோக்களையும் விழாவிற்கு அழைத்திருக்கிறார். அனைவரும் வருவதாக உறுதி அளித்துள்ளனர். தற்போது விஜயகாந்த்தின் இந்த அழைப்பை ஏற்று அனைவரும் வருவார்களா என்பது அனைவரின் கேள்வியாக இருந்து வருகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.