![Natantukkunka conscience: Shreya Angry மனசாட்சியோடு நடந்துக்குங்க : ஸ்ரேயா கோபம்](http://cinema.dinakaran.com/Karan_img/gallery/Kollywood-news-10954.jpg)
கோலிவுட், டோலிவுட் பக்கம் நீண்ட நாட்களாக தலைகாட்டாமல் இருந்த ஸ்ரேயா சமீபத்தில் வெளியான ‘கோபாலா கோபாலா' தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஹிட்டான மகிழ்ச்சியில் உள்ளார். இதற்கிடையில் இணைய தளத்தில் தனது பெயரில் இடம்பெற்றிருக்கும் போலியான கணக்குகளை பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார். ஏற்கனவே டுவிட்டர் பக்கத்திலிருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது அதை புதுப்பித்து மீண்டும் தனது கருத்துக்களை எழுத தொடங்கி இருக்கிறார். தொடக்கமே கோபத்தில்தான் ஆரம்பித்திருக்கிறது.
‘போலியாக என் பெயரில் கணக்கு தொடங்கி வைத்திருக்கும் நபர்கள் அதை நிறுத்திக்கொள்ள வேண்டும். யாரையாவது ஏமாற்றுவது என்பது சாதாரண விஷயமோ, நகைப்புக்குரியதோ இல்லை. எனது தனித்தன்மைக்கு மரியாதை கொடுங்கள். நான் நானாகவே இருக்க விடுங்கள். ஒருவர் மீது அன்பு காட்டுவதும் அவரை வரவேற்பதும் என்பது வேறு, அவர்கள் பெயரை போலியாக பயன்படுத்துவது என்பது வேறு. ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் குறுக்கிடாதீர்கள். நீங்கள் யார் என்பது உங்களுக்கு தெரியும். மனசாட்சியோடு நடந்துகொள்ளுங்கள்‘ என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment