↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய விவகாரத்தில் தொடர்புடைய பொலிசாரின் வீடுகளில் தனிப்படை பொலிசார் நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் விபச்சார கும்பல் ஒன்று சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விபச்சார கும்பலுடன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய புதுவை சி.ஐ.டி. பொலிசார், அடையாள அணிவகுப்பு நடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பொலிசாரை கண்டுபிடித்தனர்.

இதில் இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பாட்சா, ஏட்டுகள் பண்டரி நாதன், குமாரவேல், பொலிஸ்காரர்கள் செல்வகுமார், சங்கர் மற்றும் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பணியில் இருந்த 9 பேரையும் ஐ.ஜி.பிரவீன் ரஞ்சன் பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார். ஆனால் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே இந்த விவகாரத்தில் தொடர்புடைய 9 பொலிசாரும் தலைமறைவானார்கள்.

அவர்களை பிடிக்க டி.ஐ.ஜி. கண்ணன் ஜெகதீசன், உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றிரவு சம்பந்தப்பட்ட பொலிசாரின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கிடைத்தவை குறித்து தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top