↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி டையில் முடிந்தால், சூப்பர் ஓவர் மூலம் சாம்பியனை தேர்ந்தெடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அடுத்த மாதம், 14ம்தேதி தொடங்கி மார்ச் 29ம்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறுகிறது.
இந்த போட்டியின்போது சில விதிமுறைகளை அமல்படுத்த ஐசிசி முடிவு செய்துள்ளது. ஐசிசி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: உலக கோப்பையின் லீக் சுற்றுக்களிலோ அல்லது காலிறுதி, அரையிறுதி போட்டிகளின்போதோ, வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் நடைமுறை பயன்படுத்தப்பட மாட்டாது.
காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் ஏதாவது டிராவில் முடிவடைந்தால், லீக் ஆட்டங்களில் அவ்விரு அணிகளில் எந்த அணி அதிக புள்ளிகளை பெற்றுள்ளதோ அதுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதேநேரம் இறுதி போட்டியின்போது ஆட்டம் டையில் முடிவடைந்தால், சூப்பர் ஓவர் நடத்தப்படும். சூப்பர் ஓவர் மூலமே யார் சாம்பியன் என்பது முடிவு செய்யப்படும். எனவே போட்டி டையில் முடிவடைந்தால் இரு அணிகள் கோப்பையை பகிர்ந்து கொள்ள தேவையில்லை.
மேலும், உலக கோப்பை தொடருக்கு முன்பாக, நடந்த போட்டியில், எந்த ஒரு அணியின் கேப்டன் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், அது உலக கோப்பைக்கு பொருந்தாது. மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக எந்த ஒரு கேப்டனாவது சஸ்பெண்ட்டுக்கு உள்ளாகியிருந்தாலும்கூட, உலக கோப்பை போட்டியில் அவர் விளையாட தடை கிடையாது.
ஆனால் உலக கோப்பை தொடரின்போது மெதுவாக ஓவர் வீசும் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, சஸ்பெண்ட் செய்யப்பட்டால், அதை தடுக்க முடியாது. இவ்வாறு ஐசிசி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான அறிவிப்பில், உலக கோப்பை கிரிக்கெட்டில், பைனல் உட்பட எந்த ஒரு போட்டியிலும் சூப்பர் ஓவருக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Home
»
sports
»
sports.tamil
» உலக கோப்பை பைனல் சமநிலையில் முடிந்தால் என்ன தீர்வு? இதோ ஐ.சி.சி யின் முடிவு
Recent Posts
டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அ[...]
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.