
அஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த அஜீத் படங்களை தயாரித்து வருபவர் ஏ.எம். ரத்னம்.
இதை கண்டு வெகு சிலர் சந்தோஷப்பட்டாலும் திரையுலகில் பலருக்கும் புகைச்சல்தான். மேலும் சிலர் ஏ.எம். ரத்னம் அஜீத்தின் பினாமி என்று கூறி வருகின்றனர்.
இதுகுறித்து ஏ.எம். ரத்னம் அவர்கள் பதில் அளித்துள்ளார். அஜீத் சாருடைய நம்பிக்கைகுரியவனாக இருப்பதால் அவரை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பை எனக்கு தொடர்ந்து கொடுக்கிறார்.
அவரின் காதல் கோட்டை படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்ட நாள் முதல் அவரை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.
அந்த ஆசை ஆரம்பம் படம் மூலம் நிறைவேறி இருந்தது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.