இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த யுவராஜ், கடைசியாக, கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான ‘டி20’ போட்டியில் பங்கேற்றார். இதன் பின் ‘பார்ம்’ இல்லாமல் தவித்ததால், உலகக்கிண்ண அணியிலும் இடம்கிடைக்கவில்லை.
இந்நிலையில், அவர் மெரில்போன் கிரிக்கெட் கிளப் அணி சார்பில் விளையாடவுள்ளார். சசக்ஸ் அணிக்கு எதிராக துபாயில் (மார்ச் 20) நடக்கவுள்ள எமிரேட்ஸ் ‘டி20’ போட்டியில் பங்கேற்கிறார்.
பகலிரவு ஆட்டமாக நடக்கவுள்ள இப்போட்டியில் ‘பிங்க்’ நிற பந்து உபயோகப்படுத்தப்படும். இந்த அணியில் இங்கிலாந்து அணியின் அலெஸ்டர் குக், கார்பெரி, நிக் காம்ப்டனும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து யுவராஜ் கூறுகையில்,‘‘மெரில்போன் கிளப் அணிக்காக மீண்டும் பங்கேற்பது வியப்பாக உள்ளதாகவும், சிறப்பான வீரர்கள் அணியில் இருப்பதால், மீண்டும் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.