↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஆக்சன் ஜாக்சன் படத்தை அடுத்து இயக்குனர் பிரபுதேவா தற்போது 'சிங் இஸ் பிலிங்' என்ற படத்தில் பிசியாக உள்ளார். இந்த படத்தில் அக்சயகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

இந்நிலையில் பிரபுதேவா "வெல்வெட் குற்றங்கள்" என்ற புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய நாவல்தான் வெல்வெட் குற்றங்கள். தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்பட்ட விமானம் எப்படி மீட்கப்படுகிறது என்பதுதான் கதையின் கரு.

இந்த கதை பிரபுதேவாவை மிகவும் கவர்ந்ததால் அவருடைய அடுத்த படம் 'வெல்வெட் குற்றங்கள்' என்ற செய்தி வெளியாகிக்கொண்டு வருகிறது. ஆயினும் தற்போது பிரபுதேவா இயக்கிக்கொண்டிருக்கும் படத்தை முடித்த பின்னர்தான் இதுகுறித்து அவர் இறுதி முடிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது எழுத்தாளர்கள் அதிகளவில் திரையுலகில் ஈடுபட்டு வருவது, அது ஆரோக்கியமான பாதையில் செல்வதை காட்டுகிறது.  'ஐ', அனேகன் படங்களில் சுபா, காக்கி சட்டை படத்தில் பட்டுக்கோட்டை பிரபாகர், பாபநாசம் படத்தில் ஜெயமோகன் ஆகியோர் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது ராஜேஷ்குமாரின் நாவலும் படமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top