↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற சிறு பட்ஜெட் படங்களில் ஒன்று 'யாமிருக்க பயமே'. காமெடி மற்றும் த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, கருணாகரன் உள்பட பலர் நடித்திருந்தனர். டிகே இயக்கிய இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் டிகே தன்னுடைய அடுத்த பட வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் ஜீவா மற்றும் பாபி சிம்ஹா இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக இருக்கும் என்றும், இந்த படத்தின் ஹீரோயின் உள்பட தொழில்நுட்பகலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

பாபிசிம்ஹா ஏற்கனவே பாம்புச்சட்டை, உறுமீன், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, இறவி போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில் முதல்முறையாக அவர் முன்னணி நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top