↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மும்பை: பக்கத்து வீட்டு மைனர் சிறுமி குளிப்பதை செல்போனில் படம் பிடித்து, வாட்ஸ் அப்பில் பரப்பிய மாணவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மும்பை வகோலா பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளிக்கூட மாணவர் ஒருவர், தனது பக்கத்து வீட்டில் உள்ள 13 வயது சிறுமி குளியறையில் குளிக்கும்போது, அவரை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்து வந்துள்ளார். மேலும், அந்த சிறுமியின் குளியலறை காட்சிகளை வாட்ஸ் அப் மூலமாக தனது நண்பர்களுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த சம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தை, ஆரம்பத்திலேயே மாணவரை நேரில் அழைத்து எச்சரித்துள்ளார். ஆனபோதும், தொடர்ந்து அம்மாணவர் இந்த விரும்பத்தகாத செயலை செய்து வந்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த அச்சிறுமியின் தந்தை இது பற்றி வகோலா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்ததை அறிந்த மாணவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, அவரது நண்பர்கள் 3 பேரை பிடித்து அவர்களது செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மாணவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top