↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளே தான் சிறப்பாக விளையாடுவதற்கு காரணம் என அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, பாகிஸ்தானுக்கு எதிராக, தற்போது முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஒரு மேட்ச் வின்னராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளே மிக முக்கியமான காரணம்.
அதில் விளையாடுவது மிகப்பெரிய அனுபவம், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் போது நம்மைப் பற்றியே நாம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு ஆட்டமும் ஒவ்வொரு வித்தியாசமான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. அது எந்த ஒரு இளம் வீரருக்கும் மிகப்பெரிய கற்றுக்கொள்ளும் அனுபவம் ஆகும் என தெரிவித்துள்ளார்.
இவர் இந்த ஆண்டுக்கான ஆலன் பார்டர் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top