↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற அஜீத் படங்கள் உள்பட பல திரைப்படங்களை இயக்கியவர் சரண். தற்போது "ஆயிரத்தில் இருவர்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வினய், சமுத்ரிகா, ஸ்வாஸ்திகா, மற்றும் பலர் நடித்து வருகின்றனர். பரத்வாஜ் இசையமைக்கும் இந்த படத்தை சரண் தயாரித்து இயக்கி வருகிறார்.

இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ள சரண், 'இந்த படத்தில் முதல் 10 நிமிடத்தில் படத்தின் கதை என்ன என்பதை கூறிவிட்டு அதன்பின்னர் படம் முழுவதும் அதுசம்பந்தமான சம்பவங்களை மட்டும் கூறியிருக்கின்றேன்' என்றார்.

மேலும் மீண்டும் அஜீத் படம் இயக்குவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், 'அஜீத் என்னுடைய நெருக்கமான நண்பர். அசல் படத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு படம் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் ஒருசில எதிர்பாராத காரணங்களால் அப்படத்தை இயக்க முடியவில்லை.

ஆனால் நானும் அவரும் ஒரு படம் எடுப்பது என்று முடிவு செய்துவிட்டால், முந்திய நாள் பேசி அதற்கு அடுத்த நாளே படவேலையை தொடங்கிவிடுவோம். அட்டகாசம், அசல் ஆகிய 2 படங்களும் அப்படித்தான் அமைந்தது. அப்படி ஒரு வாய்ப்பு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்று நினைப்பதாக கூறினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top