↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

மோட்டிவேஷன் இல்லேன்னா கல்டிவேஷன் ஏது? ‘சுமை தூக்கி சோர்ந்திருப்போரே, என்னிடம் வாருங்கள் என்று அழைக்கிற உரிமை சிலுவைக்காரருக்கு மட்டும்தானா, எனக்கில்லையா?’ என்று கேட்பார் போலிருக்கிறது அஜீத். இல்லையென்றால் நிறைந்த சபையில் அஜீத்தின் பெயரை சொல்லி உருகியிருப்பாரா ராஜேஷ்கண்ணா.

என்னப்பா நடக்குது இங்க?

சமீபத்தில் சுமார் ஏழு படங்களுக்கு ஒரே நேரத்தில் அறிவிப்பு விழா நடந்தது. மலேசியாவின் லார்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏழு படங்களையும் தயாரிப்பது பாக்ஸ் அண் குரோ நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர்தான் ராஜேஷ்கண்ணா. இவர் பெருமான் தி ரஜினி என்ற படத்தை இயக்கியவர். அதற்கப்புறம் அல்ல, அதற்கு முன்பே அஜீத்துடன் நல்ல பழக்கத்திலிருந்தவராம். 

ஒருமுறை இவரிடம் பேசிக் கொண்டிருந்த அஜீத், ‘உன்னுடைய திறமைக்கு இன்னும் நல்லா வரணும். நிறைய முயற்சி பண்ணு. என்னால உனக்கு என்ன உதவி வேணும்னாலும் கேளு. செய்யுறேன்’ என்றாராம். அந்த வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையோடு உழைத்தவருக்குதான் இந்த மலேசிய தொடர்பு. ‘என் முன்னேற்றத்திற்கு காரணமா நான் அஜீத்தின் ஆசிர்வாதத்தைதான் நினைக்கிறேன்’ என்றார் ராஜேஷ்கண்ணா.

‘தமிழ்நாட்லேர்ந்து வர்றவங்க மலேசிய தமிழர்களை பேசியே கவுத்துருவாங்கன்னு ஒரு அலர்ட்டோட இருப்போம் நாங்க. ஆனால் ராஜேஷ்கண்ணாவை சந்தித்தபோதும், அவர் சொன்ன சில விளக்கங்களை கேட்டபோதும் இவரை நம்பி இன்வெஸ்ட் பண்ணலாம்னு தோணுச்சு. இந்த ஏழு படங்கள் மட்டுமில்ல. இன்னும் நிறைய படங்களை தயாரிப்போம். நல்ல படங்களை வாங்கி வெளியிடவும் செய்வோம்’ என்றார் ராஜா ராகவன்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top