↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தை தேவையில்லாமல் தூக்கி அடித்த ரவீந்திர ஜடேஜாவின் செயல் மிகவும் தவறானது. பொறுப்பில்லாமல் ஆடியுள்ளார் ஜடேஜா. இதுகுறித்து அணி நிர்வாகம் அவரிடம் கடுமையான குரலில் கேட்க வேண்டும். இப்படியா பொறுப்பில்லாமல் ஆடுவார் ஜடேஜா என்று கோபத்துடன் விமர்சித்துள்ளார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இங்கிலாந்துடன் நேற்று நடந்த முக்கியமான போட்டியின்போது இந்தியா மிகக் கேவலமாக ஆடி தோல்வியுற்றது. முதலில் ஆடி 200 ரன்களை மட்டுமே எடுத்த இந்தியா, பின்னர் தனது பந்து வீச்சால் இங்கிலாந்து வீரர்களை நிலை குலைய வைக்கத் தவறியது.
இந்தத் தோல்வியின் மூலம் இந்தியா முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவும் தவறியது. இத்தொடரில் ஒரு வெற்றியைக் கூட இந்திய அணியால் பெற முடியவில்லை. இந்த லட்சணத்தில் அது இன்னும் சில வாரங்களில் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளது. நேற்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றார்.
ஆனால் அவரது ஆட்டம் மகா கேவலமாக இருந்தது. என்ன செய்கிறார் என்பதே ரசிகர்களுக்குப் புரியவில்லை. அப்படி ஒரு மட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜடேஜா. 5 ரன்களில் ஆட்டமிழந்தார் ஜடேஜா. அவரை நன்றாகக் குழப்பி அவுட்டாக்கினர் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள். இதை கங்கலியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில், ஜடேஜா இப்படி ஒரு ஷாட்டை ஆட வேண்டிய அவசியம் என்ன? அவர் ஏன் அப்படி ஆடினார் என்று அவரிடம் கேட்பது அவசியம். 7 ஒவர் விளையாட வேண்டி இருக்கும் போது அவர் அப்படி ஆடியது தவறாகும். இது மாதிரியான போட்டிகளில் அவர் பொறுப்புடன் ஆட கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவர் ஒரு நல்ல வீரராக திகழமுடியும். இந்த ஷாட் குறித்து ஜடேஜாவிடம் அணி நிர்வாகம் விளக்கம் கேட்க வேண்டும்.
டோணி வெளியேறியதுமே ஜடேஜாவும் அவுட்டானது அணியை பலவீனமாக்கி விட்டது. அவர் பொறுப்புடன் நிதானித்து ஆடியிருக்கலாம். இன்னும் 20 ரன்கள் கூடுதலாக சேர்த்திருந்தால் இந்தியாவுக்கு பலமாக அமைந்திருக்கும். ஆட்டத்தின் போக்கையும் அது மாற்றியிருக்கும். ரன்னுக்காக போராட வேண்டும். சாதாரணமாக விளையாடக் கூடாது என்றார் கங்குலி.
Recent Posts
டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அ[...]
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.