
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன், சுரேஷ் கோபி முதலானோர் நடித்திருந்த படம் ஐ.
இப்படம் கடந்த 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான அன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் பெரும் கூட்டம் கூடியிருக்கிறது.
அந்த கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தியேட்டர் காவலாளி ஸ்ரீகுமார் என்பவர் அடிப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரது மொத்த உடம்பே செயலிழந்த நிலையில், அவர் இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாராம். இந்நிலையில் இச்செய்தி அறிந்த சுரேஷ் கோபி அவருக்கு 1 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்.
அதோடு சுரேஷ் கோபி இந்த தகவலை ஷங்கர் மற்றும் விக்ரம் ஆகியோருக்கும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.