
காதலர் தினத்தில் அமிஞ்சிக்கரை முருகேசனே காதலியுடன் டபுளாக உலவும்போது, ஆண்ட்ரியாவின் உதட்டை பதம்பார்த்த அனிருத் சிங்கிளாக வருகிறாரா? என்னவேய் நக்கலா பண்றீரு என்று தென்சீமையிலிருந்து வரும் குரல் கேட்கிறது. சிங்கிள்தான். ஆனா இது வேற சிங்கிள்.
அனிருத்தின் படம் போட்டு, ஆக்கோ என்ற படத்துக்கு விளம்பரம் தருவதைப் பார்த்திருப்பீர்கள். அனிருத் ஹீரோவாக நடிக்கிறாரா என்று பலரும் குழம்பிப்போன படம் அது. ஆனால், இசையும் பாடல்களும் மட்டும்தான் அனிருத். ஹீரோ வேறு நபர்.
இந்தப் படத்தில் தான் இசையமைத்த, எனக்கென யாருமில்லையா என்ற பாடலை அனிருத் காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடுகிறார். அதாவது ஒரு பாடல் மட்டும் சிங்கிளாக வெளிவருகிறது. இது எனக்கு நெருக்கமான பாடல் என்றும் அனிருத் குறிப்பிட்டுள்ளார்.
பாடல் வரியையும் பாடலை அவர் விரும்புவதையும் பார்த்தால், அனிருத்தும் சிங்கிளாகதான் இருப்பார் போலிருக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.