அனுஷ்காவின் ருத்ரமா தேவி படத்தில் சம்பள தகராறு ஏற்பட்டு உள்ளது.
தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை மெகா பட்ஜெட்டில் எடுக்கின்றனர். இதில் அனுஷ்கா ராணி வேடத்தில் நடிக்கிறார். ராணா, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்யமேனன், நித்யாமேனன், கேத்ரினா திரேஷா போன்றோரும் நடிக்கின்றனர். குணசேகரன் தயாரித்து இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பள விவகாரத்தில் நடிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் சுமன் தயாரிப்பாளர் குணசேகரன் மீது ஆந்திர மாநிலம் நம்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் ருத்ரமாதேவி படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக தயாரிப்பாளர் குணசேகர் எனக்கு ரூ.5 லட்சம் செக் கொடுத்து இருந்தார். அதை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது. பிறகு குணசேகரை அணுகி பணத்தை கேட்டேன். அவரிடம் இருந்து பொறுப்பான பதில் வரவில்லை என்று கூறியுள்ளார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.