↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிய றோ உளவு பிரிவின் முன்னாள் அதிகாரியை உளவு பார்க்க, கோத்தபாய ராஜபக்ச சில குழுக்களை நியமித்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த குழுக்கள் றோ உளவு பிரிவிற்காக தமது தரப்பின் உளவு தகவல்களை திரட்டியதாகவும் இறுதியிலேயே இதனை தாம் அறிந்து கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் மோடியுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து பேசுவதற்காக மிரிஹானையில் வீடொன்றில் தங்கியிருக்கும் மகிந்த ராஜபக்சவை சிலர் சென்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மோடி நல்லவன். எனினும் றோவிடம் இருந்துதான் தப்பிக்க முடியாது. இலங்கையில் இருந்த றோ அமைப்பின் பிரதானி இளங்கோவன் தான் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கினான்.
அவனை உளவு பார்க்க கோத்தபாய சில குழுக்களை நியமித்திருந்தார். ஆனால், இவர்கள் றோவுக்காக எங்களை உளவு பார்த்துள்ளனர்.

இறுதியில் தான் இது புரிந்தது. அறிந்த போது ஊர்வலம் சென்று சேர்ந்து விட்டது. தாஜ் ஹொட்டலுக்கு என்னை அழைப்பித்து மோடியை சந்திக்க வைக்க வேண்டும் என்ற தேவையே இந்தியகார்களுக்கு இருந்தது. நான் அதற்கு இணங்கவில்லை.

மோடியுடன் 10 நிமிடம் தனியாக பேச வேண்டியே தேவை எனக்கு இருந்தது. இதன் காரணமாகவே நான் இந்திய தூதுவரின் இல்லத்தில் அவரை சந்தித்தேன்.
அவர்கள் எனக்கு தேவையான வகையில் வேலை செய்ய வேண்டுமேயன்றி, நான் அவர்களுக்கு தேவையான வகையில் வேலை செய்ய மாட்டேன்.

அவர்களின் தாளத்திற்கு ஆடும் ஆள் நானில்லை என இந்திய பிரதமருடனான சந்திப்பு குறித்து மகிந்த விளக்கியுள்ளார். அங்கு மேலும் பேசியுள்ள முன்னாள் ஜனாதிபதி, எனது தோல்விக்கு றோ மாத்திரம் காரணமில்லை.

சோபி, ரத்ன மட்டுமல்ல மல்வத்தை பெரியவனுக்கு நான் எவ்வளவு உதவியிருக்கிறேன் இறுதியில் அவனும் எனக்கு வேட்டு வைத்தான். இவர்கள் அனைவருக்கும் நல்லாட்சியின் சுவை தற்போது தெரிந்து விட்டது.

இவர்கள் இன்னும் கொஞ்ச நாளில் எனது காலடிக்கு வருவார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு பௌத்த பிக்குகள் மீது மரியாதை இல்லை என்பதை அவரது இந்த பேச்சு காட்டுவதாக இந்த தகவல்களை வெளியிட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தற்போது நுகேகொட மிரிஹான வீதியில் உள்ள அவரது மருத்துவர் எலியந்த வைட்டுக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதியின் பயன்பாட்டுக்காக எலியந்த வைட் அந்த வீட்டை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top