
அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படம் வெற்றி பெற அஜீத், திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் பாலக்காடு அம்மன் கோவில் ஆகியவற்றில் தரிசனம் செய்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அஜீத்தின் பாணியை கடைபிடிக்கும் வகையில் இந்த படத்தில் அஜீத்துக்கு நிகராக முக்கிய கேரக்டரில் நடித்த அருண்விஜய்யும் நேற்று திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து அருண்விஜய் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது, 'திருப்பதியில் மிக அருமையான தரிசனம் கிடைத்தது. அனைவருக்கும் நல்லது நடக்கும் என்றும், கடவுளின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
அஜீத், த்ரிஷா, அனுஷ்கா, அருண்விஜய், விவேக் மற்றும் பலர் நடித்துள்ள 'என்னை அறிந்தால்' திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே பயங்கர ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.