↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad இந்திய அணித்தலைவர் டோனியின் மனைவி சாக்ஷிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.
கடந்த 2010ம் ஆண்டு யூலை 4ம் திகதி தனது பள்ளி தோழியான சாக்ஷியை மணந்தார் டோனி. இதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார்.
உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு இடையில் அவருக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்னதாகவே நேற்று குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் டோனி அந்த சமயத்தில் மனைவி சாக்ஷியுடன் இல்லை. அவர் உலகக்கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவில் இருக்கிறார்.
இது தொடர்பாக நாளை அவுஸ்திரேலியாவுடன் பயிற்சிப் போட்டியில் களமிறங்கவுள்ள டோனி கூறுகையில், எனக்கு பெண் குழந்தை பிறந்த நேரத்தில் நான் மனைவி அருகே இல்லாததை எதிர்மறையாக கருதவில்லை.
பெண் குழந்தை பிறந்ததன் மூலம் நான் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளேன். தாயும், சேயும் நலமாக உள்ளனர். ஆனால் தேசப்பணிக்காக இங்கு வந்துள்ளேன். இதனால் எல்லாவற்றுக்காகவும் காத்திருப்பேன். ஏனென்றால் உலகக்கிண்ணம் மிகவும் முக்கியமானதாகும் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top