↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


நேற்று பிரபல சமூக வலைத்தளங்களில் நடிகை பார்வதி நாயரின் புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இணையதளத்தின் டிரண்டில் கூட பார்வதி நாயரின் புகைப்படங்கள் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவ்வளவு பிரபலமில்லாத பார்வதி நாயரின் புகைப்படங்கள் அந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்த காரணம், அந்த புகைப்படங்களை எடுத்தது 'தல' அஜீத் என்பதுதான்.

அஜீத் நடிகர், பைக் ரேஸர் என்பது மட்டுமின்றி ஒரு சிறந்த புகைப்படக்கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே. 'என்னை அறிந்தால்' படத்தின் படபிடிப்பின் இடையே அஜீத் தன்னுடைய கேமராவில் பார்வதி நாயரை புகைபடங்கள் எடுத்து, படப்பிடிப்பின் கடைசி நாளில் பிரேம் போட்டு தனக்கு பரிசாக அஜீத் கொடுத்துள்ளதாக பார்வதி நாயர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கருப்பு வெள்ளை படங்களான அந்த புகைப்படங்கள்தான் நேற்று சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய நடிப்பை பாராட்டி என்னையே அவர் எனக்கு பரிசாக அளித்ததால் நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் அவர் பார்வதி நாயர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். 'என்னை அறிந்தால்' படத்தில் இவர் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் பார்வதி நாயர், கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top