
தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 23வயதாக ஹன்சிகா இதவரை 25குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது, நான் 25 குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறேன். வாரத்தில் ஒருநாள் குழந்தைகளுக்காக ஒதுக்குகிறேன். சூட்டிங் கஷ்டங்களையெல்லாம் அவர்களுடன் இருக்கும் போது மறந்து விடுகிறேன். நிறைய பொம்மைகள் வாங்கி கொடுப்பேன். அந்த பொம்மைகளை பார்த்து குழந்தைகள் கண்களில் தெரியும் மகிழ்ச்சியில் மெய்மறந்து போகிறேன்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் இல்லம் கட்ட வேண்டும் என்பது எனது லட்சியம். இதற்காக மும்பை புறநகர் பகுதியில் இடம் வாங்கி போட்டுள்ளேன். விரைவில் அந்த இல்லத்தை கட்டி குழந்தைகளை அங்கு தங்க வைப்பேன் என்றார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.