↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad அமெரிக்காவை சேர்ந்த பாபி கிறிஸ்டினா பிரவுன் என்ற நடிகை குளியலறையில் மயங்கி கிடந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ரியாலிட்டி ஷோ நடிகையான பாபி கிறிஸ்டினா பிரவுன்(Bobbi Kristina Brown Age-21) அவரது வீட்டில் உள்ள குளியலறை தொட்டியில் சுயநினைவின்றி, நிர்வாணமாய் தலை தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அப்போது அவரது கணவர் நிக் கார்டன் கிறிஸ்டினாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கிறிஸ்டினா மூளைவீக்கம் காரணமாக கோமாவில் இருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் என்றும் அதனால் இவ்வாறு நடந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டு வந்ததையடுத்து பொலிசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் வீட்டில் போதை மருந்து ஒன்றும் இல்லை என்பதை பொலிசார் உறுதி செய்தனர்.
இந்நிலையில் காவல்துறை பதிவேட்டின் படி கிறிஸ்டினாவை அவரது கணவர் நிக் கார்டன் மருத்துவமனைக்கு அனுப்பிய போது, அவரது நண்பரான மேக்ஸ்வெல் லோமாஸ் அவருடன் இருந்தது தெரியவந்துள்ளது.
அவர் கடந்த ஜனவரி 15ம் திகதி போதை மருந்து குற்றத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு 15000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதும் காவல் துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டினா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்யவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top