↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad காதல் கதை எழுதுகிறார் ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன் காதல் கதைகள் எழுத முடிவு செய்துள்ளார்.நடிப்பு தவிர பாடல், இசையில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதி ஹாசன். அடுத்து காதல் கதைகள் எழுத முடிவுசெய்துள்ளார். சமீபத்தில் அவரது பிறந்தநாளின்போது தந்தை கமல் கதை, திரைக்கதை எழுதும் திறமையை வளர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பரிசளித்தார். இதுபற்றி ஸ்ருதி கூறும்போது,‘நான் மிகவும் திறமையான எழுத்தாளர் என்று எனது தந்தை எண்ணுகிறார். அதை வளர்த்துக்கொள்ள கூறி இருக்கிறார். எனது 15வது வயதிலிருந்தே எழுத்து திறமையை வளர்த்து வருகிறேன். கதை, கவிதை, பாடல்கள் எழுதி வருகிறேன்.

ஒருசிலர்தான் அதை படித்திருக்கிறார்கள். தற்போது அதை புதுப்பிக்க எண்ணி உள்ளேன். குறும்படங்களுக்கு கதை எழுத முடிவு செய்திருக்கிறேன். என் வாழ்வில் நான் அனுபவிக்காத சூழல்கள் அதாவது காதல்போன்ற அம்சங்கள் பொதிந்த ஸ்கிரிப்ட்டாக அது இருக்கும். எனது தந்தை சிறந்த சினிமா ஆர்வலர் என்பது எல்லோருக்கும் தெரியும். வெளிநாட்டு படங்கள் மற்றும் டிவி காட்சிகளை பார்க்கும்படி அடிக்கடி என்னிடம் கூறுவார். அவரது அறிவுரையை நான் பின்பற்றி வருகிறேன்'  என்றார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top