↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
சினிமா போரடித்துவிட்டது ஆகையால் அதைவிட்டு விலகுகிறேன், இனி படிப்பில் கவனம் செலுத்த போகிறேன் என்று கூறியுள்ளார் நடிகை லட்சுமி மேனன். கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, மஞ்சப்பை போன்ற படங்களில் நடித்துள்ளவர் இப்போது கொம்பன், சிப்பாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் கொம்பன் படம் முடிந்துவிட்டது, விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார்.
லட்சுமி மேனன் கூறியுள்ளதாவது, நிறைய படங்களில் நடித்தாலும் நான் நடித்த படங்கள் பெரும்பாலும் பக்கத்து வீட்டு பெண் போன்றும், கிராமத்து பெண் போன்றும் தான் நடித்துள்ளேன். தொடர்ந்து இதுபோன்ற ரோல்களில் நடிக்கவே எனக்கு வாய்ப்புகள் வருகிறது. இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரேமாதிரி நடித்து போரடித்துவிட்டது. எனவே சினிமாவை விட்டு விலகலாம் என்று முடிவெடுத்துள்ளேன். இனி படிப்பில் கவனம் செலுத்த போகிறேன். தற்போது நான் பிளஸ் 2 படித்து வருகிறேன், இதில் நான் நிறைய மார்க் எடுக்க வேண்டும், பின்னாளில் பேஷன் டிசைனர் ஆகும் எண்ணம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.