↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
திரிஷா-நயன்தாராவின் திகில் ஆசை நிறைவேறியது



திரிஷாவும், நயன்தாராவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். காதல் கதைகளில் வலம் வந்துக்கொண்டிருந்த இருவரும் திகில் படத்தில் நடிக்க வேண்டும் என காத்திருந்தனர். அதற்கு ஏற்ப ‘மாயா‘  திகில் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது நயன்தாரா ஒப்புக்கொண்டார். ஆரி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு முடிந்தது. அஸ்வின் சரவணன் இயக்குகிறார். ஏற்கனவே சூர்யா ஜோடியாக மாஸ் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். அப்படம் ரிலீஸ் ஆனபிறகே திகில் படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததையடுத்து திருமண நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் திரிஷா. அவரும் முதன்முறையாக ‘போகி‘ என்ற திகில் படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது,‘போகி திகில் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறேன். 3 பேரின் பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது' என்றார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top