உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, புவனேஸ்வர்குமார், இஷாந்த் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இல்லை. இவர்களுக்கு இன்று உடல்தகுதி சோதனை நடத்தப்படுகிறது.
இதற்கிடையில் முரளிவிஜய், யுவராஜ் ஆகியோரை அணியில் தெரிவு செய்யாதது இந்திய அணியின் தவறு என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், யுவராஜ் சிங் 2011ம் உலகக்கிண்ண தொடர் நாயகன். முரளி விஜய் நல்ல ‘பார்மில்’ உள்ளார்.
இவர்களை உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் சேர்க்காதது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
இஷாந்த் உள்ளிட்ட காயத்துடன் உள்ள வீரர்களை உலகக்கிண்ண அணியில் சேர்த்து தவறு செய்து விட்டனர். இதனால் உலகக்கிண்ணத்தை தக்கவைப்பது கடினமாகி விடும் என்று கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.