நேற்று உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடித்த இரண்டு ஹீரோயின்களின் கேரக்டர்கள் குறித்து சமீபத்தில் இயக்குனர் கவுதம் மேனன் பேட்டி கொடுத்துள்ளார்.
முதலில் இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் ஹீரோயின் கேரக்டருக்கு அனுஷ்காவையும், தற்போது அனுஷ்கா நடித்திருக்கும் கேரக்டரில் த்ரிஷாவையும்தான் நடிக்க வைக்க கவுதம் மேனன் முடிவு செய்திருந்தாராம். ஆனால் த்ரிஷா, நடனப்பெண்ணின் வேடம் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அனுஷ்காவிடம் இருந்து அந்த கேரக்டரை தனக்கு வாங்கிக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும், இதுகுறித்து கவுதம் மேனன் அனுஷ்காவிடம் பேசியபோது, அவர் எவ்வித மறுப்பும் இன்றி த்ரிஷாவுக்காக தன்னுடைய கேரக்டரை விட்டுக்கொடுத்ததாகவும், கூறியுள்ளார்.
தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் இதுவரை தான் சந்தித்த நடிகைகளில் அனுஷ்கா மட்டும் அந்த நேரத்தில் வித்தியாசமாக தெரிந்ததாகவும், அவருடைய விட்டுக்கொடுக்கும் பண்பினால் அவர் பண்பிலும் உயர்ந்தவர் என்பதை நிரூபித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். விரைவில் திருமணமாக இருக்கும் த்ரிஷாவுக்கு அனுஷ்கா கொடுத்த திருமண பரிசாகவே இந்த கேரக்டர் அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.