↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஜெய்ஹிந்த் 2 படத்தை தயாரித்து இயக்கி நடித்த அர்ஜுன், அப்படத்தின் தோல்வியிலிருந்தும், நஷ்டத்தலிருந்தும் இன்னும் மீளவில்லை. எனவே இனி சொந்தப்படம் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். அவர் இப்படி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே, அவரை வைத்து படம் எடுப்பதில்லை என்ற முடிவுக்கு தயாரிப்பாளர்கள் வந்துவிட்டனர். காரணம்..தமிழில் அர்ஜுனுக்கு மார்க்கெட் போய் ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. எனவே தன் தாய்மொழியான கன்னடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்ட அர்ஜுன் தற்போது கேம் என்ற கன்னடப் படத்தில் நடிக்கிறார் அர்ஜுன். 

இப்படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சயனைட், வனயுத்தம் ஆகிய படங்களை இயக்கியவர். சந்தன கடத்தல் வீரப்பன் கதையை வைத்து ஏ.எம்.அர்.ரமேஷ் இயக்கிய வனயுத்தம் படத்தில் போலீஸ் அதிகாரி விஜயகுமார் வேடத்தில் நடித்திருந்தார் அர்ஜுன். அந்த படத்திற்கு பிறகு கேம் படத்தில் இருவரும் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா நடிக்கிறாராம். ஏற்கெனவே ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் அர்ஜுனுடன் நடித்துள்ளார் மனிஷா கொய்ராலா. முதல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் கேம் படம் மூலம் அர்ஜுனுடன் இணைய இருக்கிறார் மனிஷா கொய்ராலா! கன்னடத்தில் தயாராகும் கேம் படத்தை தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top