↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்கிண்ணப் போட்டிகளில் அனைத்து அணித்தலைவர்களும் டோனியை போல் செயல்பட வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து அணித்தலைவர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்திய அணித்தலைவர் டோனியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இறுதிப் போட்டியில் அதிரடியில் மிரட்டிய டோனி இந்திய அணிக்கு கிண்ணம் வென்று கொடுத்தார்.
இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், 2011ம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் டோனியின் செயல்பாடு எப்படி இருந்ததோ அதை அப்படியே மற்ற அணித்தலைவர்களும் பின்பற்ற வேண்டும்.
கடந்த 2011ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் மும்பையில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் துடுப்பாட்டத்தில் அசத்திய டோனி, இலக்கை வெற்றிகரமாக எட்ட உதவினார்.
மேலும் நான் ஐபிஎல் தொடரில் இருந்த போது, இது முன்னிருந்து வழி நடத்துவதற்கான சரியான நேரம் என்று தன் உள்ளுணர்வு சொல்வதாக என்னிடம் தெரிவித்தார்.
டோனியிடம் அந்த தன்னம்பிக்கை இருந்ததால் தான், மற்ற வீரர்களுக்கும் உற்சாகம் அளிக்க முடிந்தது. இந்த உலகக்கிண்ண தொடரில் கடினமான தருணங்கள் வரலாம் ஆனால் வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியமாக கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top