↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இரட்டைக் பிரஜாவுரிமை வழங்கப்பட உள்ளது. அதற்கமைய,
  • தொழில் தகைமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல்.
  • இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துக்களை வைத்திருத்தல்.
  • இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட பணத்தை 3 ஆண்டுகள் நிலையான வைப்பாக பேணுதல்.
  • மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட ஏதாவது ஓர் வங்கியில் வெளிநாட்டு நாணயப் பெறுமதியில் 25000 அமெரிக்க டொலர்களை வைப்பாக பேணுதல்.
  • 25000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பிணைப்பத்திரங்களை வைத்திருந்தல்.
  • 55 வயதை பூர்த்தி செய்திருத்தல்.
ஆகிய தகுதிகளில் ஒன்றையேனும் கொண்டிருத்தல் வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீர்மானத்திற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க அமைச்சரவையில் அனுமதி பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top