
நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி, தோல்விகளை சந்திக்காமல் அசத்தி வருகிறது.
இந்நிலையில் வருகின்ற 26ம் திகதி சிட்னியில் நடக்கும் 2வது அரையிறுதியில் இந்தியா, அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் 10 முறை மோதியதில் அதில் 7 முறை அவுஸ்திரேலியா வென்றுள்ளது. 3 முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது.
எனவே இவ்விரு அணிகளின் மோதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பெண் சேலை வியாபாரி ஒருவர், இந்தியா உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றால் அணித்தலைவர் டோனிக்கு தலா ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள சேலைகளை வழங்குவதாக கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.