![](http://world.lankasri.com/photos/thumbs/2015/03/womensex_animal_001.jpg)
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவரை 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் கொண்ட கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது.
வெர்டன்(Verdun) நகரில் உள்ள வீடு ஒன்றில் அந்த பெண்ணை சிறைவைத்த கும்பல், அவரை மாதக்கணக்கில் சித்ரவதை செய்து கற்பழித்து வந்துள்ளனர்.
இதன் உச்சக்கட்டமாக, அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி விலங்குகளுடன் உடலுறவு கொள்ள செய்து சித்ரவதை செய்துள்ளனர்.
தொடர்ந்து பல கொடூர சித்ரவதைகளுக்கு உள்ளான அந்த பெண், சில தினங்களுக்கு முன் தனது வங்கி ATM அட்டையை தெரிந்த நபர் ஒருவரிடம் பெற்றுவர அனுமதி கேட்டுள்ளார்.
இவ்வாறு அங்கிருந்து தப்பிய அந்த பெண், தனக்கு பழக்கமான ஆசிரியர் ஒருவரிடம் தனது நிலையை எடுத்து கூறியுள்ளார்.
இளம்பெண்ணின் நிலையை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியர், பொலிசாருக்கு தகவல் அனுப்பியுள்ளார். அந்த பெண்ணை சிறை வைத்திருந்த வீட்டிற்கு விரைந்து சென்ற பொலிசார், 6 பேரையும் கைது செய்தனர்.
கைது குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி ஒருவர், இளம்பெண்ணை சித்ரவதை செய்து கற்பழித்த குற்றங்களுக்காக 19 முதல் 27 வயதுடைய 6 பேரை கைது இன்று(திங்கள் கிழமை) செய்துள்ளதாகவும், மாதக்கணக்கில் பல சித்ரவதைகளுக்கு உள்ளான அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment