↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad உலகக்க கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறும் அவ்வணியின் வீரர் ஸ்டீவன் சுமித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
‘கோடைகாலத்தில் நடந்த டெஸ்ட் மற்றும் முத்தரப்பு போட்டி தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய அணி ஒரு வெற்றி கூட பெறவில்லை. இது இந்திய அணியினரின் மனதில் லேசாக ஓடத்தான் செய்யும்.
இந்தியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகம் தான் என்று நான் நினைக்கிறேன்.
இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் அதிக காலம் தங்கி விளையாடுவதால் இங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்த படி தங்களை நன்கு மாற்றி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் உள்ளூர் மைதானங்களில் ஆடுவது போல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி தனது பணியை சரியாக செய்ய வேண்டும். இந்த ஆட்டத்தில் கடும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை நிதானத்துடன் எதிர்கொண்டு, கடைசி 15 ஓவர்களில் அதிரடி துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது போல் இந்த ஆட்டத்திலும் செய்ய வேண்டியது அவசியமானதாகும் என சுமித் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top