↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
எனது கணவரை மீண்டும் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி டோணி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகி விட்டது டோணி, தனது மனைவி சாக்ஷியை விட்டு ஆஸ்திரேலியா சென்று. தனது மனைவிக்கு நடந்த பிரசவத்தின்போதும் கூட டோணி அருகில் இல்லை. தனது மகள் பிறந்தபோதும் கூட அவர் வந்து பார்க்கவில்லை.
இந்த நிலையில் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது. அரை இறுதிப் போட்டியில் டோணியின் தீரமான போராட்டத்துடன் இந்தியாவின் வேட்டை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் டோணியின் வருகையை எதிர்நோக்கியிருப்பதாக அவரது மனைவி சாக்ஷி டிவிட்டரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட் செய்தியில்,
கடுமையாக போராடினீர்கள்.. நமது அணிக்காக பெருமைப்படுகிறேன். சிலவற்றில் வெல்லலாம், சிலவற்றை இழக்கலாம். ஆனால் செய்த தியாகங்கள் மதிப்புக்குரியவை. இறுதியாக எனது கணவரைக் காணப் போகிறேன் என்று கூறியுள்ளார் சாக்ஷி. சாக்ஷி மட்டுமா, அந்த குட்டிப் பாப்பாவும் கூடத்தான் தனது தந்தையைப் பார்க்க ஆவலாக காத்திருக்கும்.. சீக்கிரம் ஓடியாங்க டோணி.
Recent Posts
டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு
இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் [...]
டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி
இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் வ[...]
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந[...]
சமையல்காரன் மகன் இன்று கோடீஸ்வரன்: இது ரொனால்டோவின் கதை
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிய[...]
இலங்கை வீரர்களுக்கு ஜாம்பவான்களின் பயிற்சி: வெட்டிமுனி நம்பிக்கை
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை வீரர்களுக்கு பயிற்சியளித்தது திருப்தி அ[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.