↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad தற்கொலைக்கு முயன்று மாடியில் இருந்து குதித்த நபர், 6-வது மாடியில் மாட்டிக்கொண்டு தொங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங் நகரை சேர்ந்த யுவான் (Yuvan age - 44) என்ற நபர் வாழ்க்கையை வெறுத்த காரணத்தால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
அதற்காக 11 வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். ஆனால் அவர் கீழே விழுவதற்கு முன் 6-வது மாடியில் உள்ள ஏசி மிஷினின் கம்பியில் அவரது கால்சட்டை மாட்டி கொண்டது. அதனால் அவர் அங்கு தொங்கி கொண்டு இருந்தார்.
உடனடியாக இதை பார்த்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர், அவரிடம் கயிறு கொடுகப்பட்டு அவரை கீழே இறக்க முயற்சி செய்யப்பட்டது, ஆனால் அது தோல்வி அடைந்து, அவர் 5 வது மாடியில் சிக்கி கொண்டார்.
5வது மாடியில் தொங்கிய அவர், ”என்னால் எதையும் பிடிக்க முடியவில்லை....என்னால் எதையும் பிடிக்க முடியவில்லை ...” என சத்தம் போட்டுள்ளார், உடனே தீயணைப்பு படையினர் பதட்டப்பட வேண்டாம், அசையாமல் இருங்கள் எனக் கூறி அவரை பத்திரமாக மீட்டனர்.
30 நிமிட போராட்டத்திற்கு பிறகு அவர் தரை தளத்திற்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு தலையில் மட்டும் சிறிய காயம் இருந்தது.
உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top